கணவர், மாமியார் சித்திரவதை : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை!

 

கணவர், மாமியார் சித்திரவதை : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை!

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே வசித்து வந்த தம்பதி வீரராகவன்(31) – சுஜா(29). இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 7 மாத ஆண் குழந்தை உள்ளது. சுஜாவுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார். அவரை வீரராகவனின் தம்பிக்கு மணமுடிக்க வீரராகவன் பெற்றோர் பெண் கேட்டுள்ளனர். இதற்கு சுஜாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த வீரராகவனின் உறவினர்கள் சுஜாவை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

கணவர், மாமியார் சித்திரவதை : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை!

வரதட்சணை கேட்டு அவ்வப்போது சுஜாவை சித்திரவதை படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து சுஜாதா தனது பெற்றோரிடம் தெரிவித்தும், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் படுத்தலாம் என கூறியுள்ளனர். ஒருகட்டத்தில் சித்திரவதையை தாங்க முடியாத சுஜா கடந்த 19ம் தேதி தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை சுஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன்னதாக தனது செல்போனில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்து வைத்துள்ளார். அதில் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றும் கணவர், மாமியார் தனக்கு இழைத்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்டுவதற்காக இந்த வீடியோவை பதிவு செய்வதாகவும் கதறி அழுதபடியே கூறுகிறார். சுஜாவின் இறுதிச் சடங்கிற்கு கூட வீரராகவன் வரவில்லையாம்.

கணவர், மாமியார் சித்திரவதை : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை!

சுஜா பதிவு செய்திருந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவர் வீரராகவனை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுஜாவின் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.