ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

 

ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா திருவிழா இரண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தொடங்கிய விழா 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. நடராஜர் கோயிலில் தேரோட்டம் 29 ஆம் தேதியும், 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது.

ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆரூத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.