இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓரியண்ட் கிரீன் பவர்…. 3 மாதத்தில் ரூ.21 கோடி லாபம்

 

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓரியண்ட் கிரீன் பவர்…. 3 மாதத்தில் ரூ.21 கோடி லாபம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் உற்பத்தி நிறுவனமான ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி, கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.20.90 கோடி ஈட்டியுள்ளது. 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் ரூ.15.4 கோடியை நிகர இழப்பாக கண்டு இருந்தது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓரியண்ட் கிரீன் பவர்…. 3 மாதத்தில் ரூ.21 கோடி லாபம்

ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது போல் அந்நிறுவனத்தின வருவாயும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.116.12 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.87.37 கோடியாக இருந்தது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓரியண்ட் கிரீன் பவர்…. 3 மாதத்தில் ரூ.21 கோடி லாபம்

ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-20ம் நிதியாண்டு ஒட்டு மொத்த அளவில் நல்ல ஆண்டாக அமைந்தது. அந்த நிதியாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.37 கோடி ஈட்டப்பட்டுள்ளது. முந்தைய (2018-19) நிதியாண்டில் ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது என தெரிவித்துள்ளார்.