அரசு ஊழியர்கள் குறித்த நேரத்திற்குள் பணிக்கு வர ஆணை!

 

அரசு ஊழியர்கள் குறித்த நேரத்திற்குள் பணிக்கு வர ஆணை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.

அரசு ஊழியர்கள் குறித்த நேரத்திற்குள் பணிக்கு வர ஆணை!

இருப்பினும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்தது. கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட விடுப்பு அளிக்கப்பட்டதால் வாரத்தின் 5 நாட்கள் வேலை என இருந்ததில் மாற்றம் செய்யப்பட்டு வாரத்தில் 6 நாட்கள் அரசு அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் குறித்த நேரத்திற்குள் பணிக்கு வரவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பணிக்கு வரும் நேரம் பட்டியலை 10:30 மணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாதி ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுவதால் துரிதமாக செயல்பட்டு கோப்புகளை முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.