பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

 

பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து வகையான பொது நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

அந்த கடிதத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு மாநிலங்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி என்பது எட்டாக்கனியாகிவிட்டதாகவும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால், அரசு மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு சேர வாய்ப்பு ஏற்பட்டு அதன் மூலம், ஊரக பகுதிகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.