கொரோனா என்ற கொடிய அரக்கனை வீழ்த்துவோம்! தீபாவளிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

 

கொரோனா என்ற கொடிய அரக்கனை வீழ்த்துவோம்! தீபாவளிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொரோனா என்ற கொடிய அரக்கனை வீழ்த்துவோம்! தீபாவளிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக மக்களின் உயிரிலும்,உணர்விலும் இரண்டற கலந்து மக்களால் நான், மக்களுக்காகவே நான் என தனது இறுதி மூச்சு உள்ளவரை மக்கள் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்த மக்கள் தலைவி இதய தெய்வம் மாண்புமிக அம்மாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன். நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்ததை போல கொரோனா என்ற கொடிய அரக்கனை வெல்ல இந்த தீப ஒளி திருநாளில் அனைவரும் சபதம் ஏற்போம். எத்தனையோ இன்னல்களையும், இடையூறுகளையும் கடந்து வந்த நாம் இதையும் கடந்துவருவோம். சமூக இடைவெளியை கையாண்டு, தீபாவளி திருநாளை கொண்டாடுவோம். வருங்காலங்களில் அனைவரின் வாழ்க்கையும் வண்ணமயமாகவும், சர்க்கரை இனிப்பை போல வாழ்க்கை செழித்தோங்கட்டும், தீப ஒளி போல அனைவரின் வாழ்விலும் சுடர் விடட்டும். இந்த தீப ஒளி திருநாள் ஒவ்வொருவர் இல்லங்களிலும் துன்பத்தை நீக்கட்டும். இன்பங்களும் இனிய நிகழ்வுகளும் களைகட்டும். எவ்வித பாகுபாடும் இன்றி, ஏற்றதாழ்வும் இன்றி தமிழக மக்கள் அனைவரும் வலமும் நலமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.