திடீர் விசிட்… மக்களின் குறைகளை கேட்டறிந்த ஓபிஎஸ்!

 

திடீர் விசிட்… மக்களின் குறைகளை கேட்டறிந்த ஓபிஎஸ்!

அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. நீலகிரியில் வரும் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

திடீர் விசிட்… மக்களின் குறைகளை கேட்டறிந்த ஓபிஎஸ்!

கேரளா மாநிலத்தில் பல மாவட்டங்களை சூறையாடிய டவ்-தே புயல், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் லேசான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் போடி அருகே உள்ள ஊத்தங்கரை, வடக்கு மலை உள்ளிட்ட பகுதிகளில் மாந்தோப்புகள் சேதமடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் விழுந்து சேதமடைந்துள்ளது.

இதை போடி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் துணை முதல்வருமான ஓபிஎஸ் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கொச்சின்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்ற அவர் ,புயலால் சேதமடைந்த மரங்களை பார்வையிட்டதோடு அங்கு நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளையும் கேட்டறிந்தார்.