வசந்தகுமார் எம்.பி. வசந்தகுமார் பூரண நலம் பெற வேண்டும்- ஓபிஎஸ் ட்வீட்
தமிழகத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 30க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எம்.பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
கொரோனா தொற்று தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.H.வசந்தகுமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டுவர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 17, 2020
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், “கொரோனா தொற்று தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹெச். வசந்தகுமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டுவர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.