” மனிதநேயம் செழித்து வளர, தன்னுயிரையே இவ்வுலகிற்கு அர்ப்பணித்த தேவகுமாரனாம் ஏசுபிரான்” ஓபிஎஸ் ட்வீட்!

 

” மனிதநேயம் செழித்து வளர, தன்னுயிரையே இவ்வுலகிற்கு அர்ப்பணித்த தேவகுமாரனாம் ஏசுபிரான்”  ஓபிஎஸ் ட்வீட்!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி  துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

” மனிதநேயம் செழித்து வளர, தன்னுயிரையே இவ்வுலகிற்கு அர்ப்பணித்த தேவகுமாரனாம் ஏசுபிரான்”  ஓபிஎஸ் ட்வீட்!

உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். அதே சமயம் கொரோனா பேரிடர் காலம் என்பதால் தேவாலயங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆராதனை மற்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.

” மனிதநேயம் செழித்து வளர, தன்னுயிரையே இவ்வுலகிற்கு அர்ப்பணித்த தேவகுமாரனாம் ஏசுபிரான்”  ஓபிஎஸ் ட்வீட்!

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அகிலம் முழுவதும் மனிதநேயம் செழித்து வளர, தன்னுயிரையே இவ்வுலகிற்கு அர்ப்பணித்த தேவகுமாரனாம் ஏசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.