“ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான்” இருந்ததையும் தாரை வார்த்த ஓபிஎஸ்!!

 

“ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான்” இருந்ததையும் தாரை வார்த்த ஓபிஎஸ்!!

காங்கிரஸ், திமுக கூட்டணி தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று தாராபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

“ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான்” இருந்ததையும் தாரை வார்த்த ஓபிஎஸ்!!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றது. அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய டெல்லியில் இருந்து தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் முருகனை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை செய்ய இன்று திருப்பூர் வந்துள்ளார்.

“ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான்” இருந்ததையும் தாரை வார்த்த ஓபிஎஸ்!!

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடிகலந்துகொண்டுள்ள பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், “இந்தியாவை இருளுக்குள் தள்ளிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ், திமுக கூட்டணி தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சாரும். உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்” என்றார்.