பிளஸ் டூ மதிப்பெண்படி இந்த ஆண்டிலேயே எம்பிபிஎஸ் சேர்க்கையை துவங்க வேண்டும்- ஓபிஎஸ்

 

பிளஸ் டூ மதிப்பெண்படி இந்த ஆண்டிலேயே எம்பிபிஎஸ் சேர்க்கையை துவங்க வேண்டும்- ஓபிஎஸ்

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிளஸ் டூ மதிப்பெண்படி இந்த ஆண்டிலேயே எம்பிபிஎஸ் சேர்க்கையை துவங்க வேண்டும்- ஓபிஎஸ்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தி, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டிலேயே மருத்துவப் படிப்பில் சேர்க்கை நடைபெற ஆவன செய்ய வேண்டும்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பு உட்பட அனைத்து படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. மேலும், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட மசோதாவை வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.