“ஜெய்ஹிந்த் குறித்து தவறாக பேசுவதா?; உடனடியாக நீக்குங்கள்” – திமுக எம்எல்ஏவை வறுத்தெடுத்த ஓபிஎஸ்!

 

“ஜெய்ஹிந்த் குறித்து தவறாக பேசுவதா?; உடனடியாக நீக்குங்கள்” – திமுக எம்எல்ஏவை வறுத்தெடுத்த ஓபிஎஸ்!

ஜெய்ஜிந்த் தொடர்பாக திமுக எம்எல்ஏ ஈஸ்வரன் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென அதிமுக எம்எல்ஏ ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பேரவையில் உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில், ஆளுநர் உரை என்பதை இந்த அரசு எந்த திசையில் பயணிக்கிறது என்பதைக் காட்டுகின்ற முறை என்று சொல்லிவிட்டு, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை ஆளுநர் உரையில் இருந்து நீக்கியதன் மூலம் தமிழகம் தலைநிமிர்ந்தது என்று கூறியிருக்கிறார்.

“ஜெய்ஹிந்த் குறித்து தவறாக பேசுவதா?; உடனடியாக நீக்குங்கள்” – திமுக எம்எல்ஏவை வறுத்தெடுத்த ஓபிஎஸ்!

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை ஆளுநர் உரையில் தவறுதலாக விடுபட்டிருக்கலாம் நான் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நீக்கியதால் தமிழகம் தலைநிமிர்ந்தது என்று கூறிவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் அடிமைப்பட்ட மக்களின் மனங்களில் விடுதலை வேட்கையை வளர்க்க விடுதலைப் போராட்ட வீரர்களால் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் முழங்கப்பட்டன. இந்தச் சொல்லை முதன்முதலில் முழங்கியவர் விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை.

நாட்டுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, திருப்பூர் குமரன் ஆகியோரின் வீரமுழக்கம், தீரன் சின்னமலையின் தீரச்செயல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் அடிக்கடி முழங்கப்பட்ட ஜெய்ஹிந்த் என்ற சொல் வெற்றிக்கான வீரமுழக்கச் சொல். சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியவர் வரை நாட்டுப்பற்றைத் தட்டி எழுப்பும் மந்திரம். இதன் பொருள் வெல்க இந்தியா என்பதாகும். இந்திய நாடு விடுதலை பெற்ற நாளில் அனைத்து அஞ்சல்களிலும் ஜெய்ஹிந்த் என்ற வெற்றி இலக்குடன் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.

“ஜெய்ஹிந்த் குறித்து தவறாக பேசுவதா?; உடனடியாக நீக்குங்கள்” – திமுக எம்எல்ஏவை வறுத்தெடுத்த ஓபிஎஸ்!

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இந்த வெற்றிச் சொல் ஆளுநர் ஆற்றிய உரையில் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று ஈஸ்வரன் பேசியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சாதி, மத, இன, மொழிப் பாகுபாடின்றி இந்தச் சொல் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது உணர்வுபூர்வமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒற்றைச் சொல். ஆகவே ஈஸ்வரன் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.