அழைப்பிதழிலிருந்து அகற்றப்பட்ட ஓபிஎஸ் பெயர்!

 

அழைப்பிதழிலிருந்து அகற்றப்பட்ட ஓபிஎஸ் பெயர்!

நாளை நடைபெற இருக்கும் அரசு விழாவுக்கான அழைப்பிதழிலிருந்து துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை.

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என அதிமுகவுக்கு ஏற்பட்ட சலசலப்புக்கு அக்டோபர் 7 ஆம் தேதி விடை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷமிட்டு, அதிமுக இரு பிரிவாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டினர். இரு பிரிவாக பிரிந்து அதிமுக நிர்வாகிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

அழைப்பிதழிலிருந்து அகற்றப்பட்ட ஓபிஎஸ் பெயர்!

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் நாளை நடைபெற உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. தனியார் பங்களிப்புடன் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இல்லை.