மோடியை சந்திக்க சென்ற இடத்தில் எல்.முருகனை சந்தித்த ஓபிஎஸ்

 

மோடியை சந்திக்க சென்ற இடத்தில் எல்.முருகனை சந்தித்த ஓபிஎஸ்

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியை இழந்தது. இந்நிலையில், இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லி விரைந்தார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள ஓ.பி.எஸ் நாளை காலை 11.05 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்து பேசவுள்ளார். பிரதமரின் அழைப்பின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோடியை சந்திக்க சென்ற இடத்தில் எல்.முருகனை சந்தித்த ஓபிஎஸ்

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி வந்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை மரியாதை நியமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.ஓ. பன்னீர்செல்வமும் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.