முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் அஞ்சலி

 

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் அஞ்சலி

சேலத்திற்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நல குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இதையடுத்து தவுசாயம்மாள் இன்று நள்ளிரவு 1 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அவரது மகனும் தமிழக முதல்வருமான பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். கொரோனாவால் கூட்டம் கூடுவதை தடுக்க தாயார் தவுசாயம்மாளின் இறுதி ஊர்வலம் இன்று காலை எளிமையாக நடந்து முடிந்தது.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் அஞ்சலி

இறுதி ஊர்வலத்துக்கு வர முடியாத துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சிலுவம்பாளையத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு இன்று மாலை வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முதலமைச்சரை சந்தித்து ஆறுதல் கூறினார்.