கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்… அதிமுக தான் வெல்லும் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் திடீர் அறிக்கை!

 

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்… அதிமுக தான் வெல்லும் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் திடீர் அறிக்கை!

அதிமுகவினர் செய்திகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளை நம்பி மனம் தளர வேண்டாமென அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபீஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகவிருக்கும் சூழலில் வாக்குக்கணிப்பு என்ற பெயரில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளிய வெளியாகியிருக்கும் செய்தி தொகுப்புகள் கழக உடன்பிறப்புகள் யாருக்கும் எந்தவிதமான செல்வத்தையும் தரவில்லை என்பதை கேட்டு பெருமிதம் கொள்கிறோம். அதிமுக என்னும் ஆலமரம் எந்த சலசலப்புக்கு அசைந்துவிடாமல் அண்டி வந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் கற்பக விருட்சம் என்பதே உண்மை. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள் அதிமுக வரலாறு வியக்கும் வகையில் இந்த தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அம்மாவின் அரசை அமைக்கும் என்று உறுதிபட தெரிவிக்கின்றன.

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்… அதிமுக தான் வெல்லும் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் திடீர் அறிக்கை!

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் வந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும் கழகத்தின் வெற்றியை குறிப்பிடவே இல்லை. மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முதல் நாள் வரை சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரத்திலேயே 2016இல் கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் கழக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த பிறகு கழகம் பெரும்பான்மை பெற்றதையும் அம்மா அவர்கள் ஆட்சி அமைத்ததையும் நாம் பார்த்தோம்.

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்… அதிமுக தான் வெல்லும் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் திடீர் அறிக்கை!

இப்போது வெளியிடப்பட்டு வரும் முடிவுகள் கழக உடன் பிறப்புகளை சோர்வடையச் செய்து வாக்கு எண்ணிக்கையின் போது நமது செயல்பாடுகளை முடக்கி நம்மை ஜனநாயக கடமையாற்ற விடாமல் செய்வதற்கான முயற்சிகளை தவிர வேறல்ல. நம்மை சோர்வடையச் செய்வதற்கான முயற்சிகள் எதையும் நம்ப விடாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்ப முதலே கவனமாக இருந்து விழிப்புவுணர்வுடன் பணியாற்றுங்கள். ஒரு வாக்கு கூட நம்மிடமிருந்து பறிக்கப்படாத வண்ணம் தீவிரமாக பணியாற்றுங்கள்.

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்… அதிமுக தான் வெல்லும் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் திடீர் அறிக்கை!

திமுகவினர் வதந்திகளைப் பரப்புவதிலும் தில்லுமுல்லு செய்வதிலும் வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கை தேர்ந்தவர்கள் என்பதை நாடே அறியும். இதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாக சொல்லலாம், ஆகவே வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தீர்வுகாண வேண்டும்.

கழக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தான் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

புரட்சித் தலைவர் ஆட்சி அமைக்க முடியாது என்றும் புரட்சித்தலைவியின் தோல்வி உறுதி என்றும் பகிரங்கமாக சத்தியம் செய்தவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் மக்கள் நம் இயக்கத்தை இமயத்தின் உச்சியில் வீற்றிருக்க வைத்தனர். அந்த நிலையை இப்போதும் தொடரப் போகிறது. களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லும். வெற்றி மாலை சூட தயாராகுங்கள் ” என்று குறிப்பிட்டுள்ளனர்.