ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக டெல்லியில் முகாம் : பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

 

ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக டெல்லியில் முகாம் : பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் சந்திக்கின்றனர்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக டெல்லியில் முகாம் : பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்து அதிமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. இந்த சூழலில் சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வருகிறார்.இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லி சென்றார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதாக செய்தி வெளியான நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதன் மூலம் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியை சந்திப்பது உறுதியானது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக டெல்லியில் முகாம் : பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

இன்று காலை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் சேர்ந்து மோடியை சந்திக்கவுள்ளனர். சசிகலா விவகாரம், அரசியல் சூழல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் இரண்டு பேரும் பேச வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து இருவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளனர்.