திமுக தில்லுமுல்லு.. ‘தீவிரமாக கண்காணியுங்கள்’ : ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவு!

 

திமுக தில்லுமுல்லு.. ‘தீவிரமாக கண்காணியுங்கள்’ :  ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு குளறுபடி நடக்க வாய்ப்பு இருப்பதால், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திமுக பிரமுகர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

திமுக தில்லுமுல்லு.. ‘தீவிரமாக கண்காணியுங்கள்’ :  ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவு!

அதே போல, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் இன்று காலை கோவையில் இருக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு அனைத்து கட்சியினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிழலில், வாக்கு எண்ணும் மையங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.

24 மணி நேரமும் இரவு பகல் பாராமல் சுழற்சிமுறையில் மிகுந்த எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் கண்காணியுங்கள் என்றும் திமுகவின் முறைகேடு தில்லுமுல்லுகளை தாண்டி வாக்குபதிவு சுமுகமாக நடைபெற்றுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.