ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

 

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

கருப்பு சட்டை அணிந்த ஓபிஎஸ் – இபிஎஸ் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

இதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது நினைவு தினத்தை ஒட்டி அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். இதில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்வின் லட்சியமாகக் கொண்டு “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன்வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய கழகத்தை, தனது ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பால், எண்ணற்ற தியாகங்களால் ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெறச் செய்த புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் எனது நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.