‘சர்ச்சையை கிளப்பிய போடி பகுதி போஸ்டர்கள்’.. மூத்த அமைச்சர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை!

 

‘சர்ச்சையை கிளப்பிய போடி பகுதி போஸ்டர்கள்’.. மூத்த அமைச்சர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஆயத்தமாகி வருகின்றன. திமுகவில் முக ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிமுகவிலோ எடப்பாடியா அல்லது ஓ.பன்னீர் செல்வமா என குழப்பம் நீடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த தேர்தலில் முதல்வர் பதவிக்கு நிற்க வேண்டும் என நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிமுகவினர், அவருக்கு ஆதரவு திரட்டினர். இச்சம்பவம் அதிமுகவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து இன்று காலை தேனி மாவட்டம் போடியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டர்களில் அம்மா ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓபிஎஸ் தான் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘சர்ச்சையை கிளப்பிய போடி பகுதி போஸ்டர்கள்’.. மூத்த அமைச்சர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை!

இந்த போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுகவின் மூத்த அமைச்சர்களான ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம், வேலுமணி உள்ளிட்டோருடன், அவரது இல்லத்தில் ஆலோசனை நடக்க உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.