சமுதாய கட்டடத்தை வயது முதிர்ந்த அம்மா கையால் திறக்கவைத்து மகிழ்ந்த ஓபிஎஸ்!

 

சமுதாய கட்டடத்தை வயது முதிர்ந்த அம்மா கையால் திறக்கவைத்து மகிழ்ந்த ஓபிஎஸ்!

போடி தொகுதியில் உள்ள பழனிசெட்டிபட்டி, துரைராஜபுரம், அம்மாபட்டி, பொட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட மினி கிளினிக்குகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றுதிறந்து வைத்தார். பின்னர், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

சமுதாய கட்டடத்தை வயது முதிர்ந்த அம்மா கையால் திறக்கவைத்து மகிழ்ந்த ஓபிஎஸ்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட சடையால் பட்டியில் தனது சொந்த நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட சமுதாய கட்டிடத்தை கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அருகிலிருந்த வயது முதிர்ந்த அம்மாவை திறக்க வைத்து மகிழ்ந்தார். உடன் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம் சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரிதா நடேஷ் மற்றும் பலர் உள்ளனர்.

இதனைதொடர்ந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சடையால்பட்டியில் பிறந்த குழந்தைக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓபன்னீர் செல்வம் சுபிக்ஷா என பெயர் சூட்டினார்.