அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ், செம்மலை திடீர் வருகை

 

அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ், செம்மலை திடீர் வருகை

அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் காலை 9:45 மணிக்கு, கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்குத் தனித் தனியே அழைப்பு விடுக்கப்படும் என்றும் அனைத்து கழக உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ், செம்மலை திடீர் வருகை

அதிமுக செயற்குழு நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், செம்மலை வருகை தந்துள்ளனர். செயற்குழு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தலைமை அலுவலகத்திற்கு இருவரும் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.