ஒரே காரில் முதல்வரும் துணை முதல்வரும் பயணம்… இடையே சிறு விபத்து

 

ஒரே காரில் முதல்வரும் துணை முதல்வரும் பயணம்… இடையே சிறு விபத்து

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரே விமானத்தில் வந்த இருவரும், ஒரே காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

ஒரே காரில் முதல்வரும் துணை முதல்வரும் பயணம்… இடையே சிறு விபத்து

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியனுக்கு அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகேயுள்ள கோவிந்தபேரியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதற்காக இருவரும் ஒரே காரில் கோவிந்தபேருக்கு புறப்பட்டு சென்றனர். இருவரும் ஒரே காரில் பயணித்தது இதுவே முதல்முறையாகும். முதல்வரையும் துணை முதல்வரையும் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் பயணித்த காருக்கு பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனம் வல்லநாடு பஜார் பகுதியில் சென்றுகொண்டிருந்த அதிமுகவினரின் வாகனம் முன்பே கன்றுக்குட்டி ஒன்று திடீரென வந்து விழுந்தது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அப்பகுதியில் சிறு பரபரப்பு ஏற்பட்டது.