ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆயுத பூஜை வாழ்த்து!

 

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆயுத பூஜை வாழ்த்து!

தமிழக மக்களுக்கு அதிமுக தலைமை கழகம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளது. மக்கள் அனைவரும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வாழ்த்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆயுத பூஜை வாழ்த்து!

இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவராத்திரி பண்டிகையில் 9 திருநாட்களில் இறுதி நாளில் ஆயுத பூஜையும் பத்தாவது நாளில் விஜயதசமியும் பக்தியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றன அவர் அவரது தொழில் வளம் பெருகிட மக்கள் அன்னையின் அருள் வேண்டி தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற கருவிகளையும் இயந்திரங்களின் தூய்மைப்படுத்தி சந்தனம் குங்குமம் இட்டு அவற்றை பொருளாக கருதி வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். விஜயதசமி தினத்தன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியில் முடிவடையும் என்பது அவரரது நம்பிக்கை.

சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளில் அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வெற்றி மேல் வெற்றி பெற்று அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்த எங்களது மனமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.