துணை முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி!

 

துணை முதல்வர் ஓபிஎஸ்  மருத்துவமனையில் அனுமதி!

துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ பன்னீர் செல்வம் இன்று காலை சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். திடீரென அவர் மருத்துவமனைக்கு சென்றதன் காரணம் என்ன? கொரோனா தொற்றா? என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து, அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனை முடிந்த பிறகு இன்று பிற்பகல் அல்லது மாலை வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.

துணை முதல்வர் ஓபிஎஸ்  மருத்துவமனையில் அனுமதி!

இந்த நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் பரிசோதனைகள் முடிந்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கடந்த 25 ஆம் தேதியும் பரிசோதனைக்காக ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்றைக்கே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.