புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு : ஈரோட்டில் த.வா.க. ஆர்ப்பாட்டம்
Sep 30, 2020, 20:00 IST1601476234000
மத்தியஅரசின் புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மேற்கு மண்டல செயலாளர் வேல்முருகன், சேலம் மாவட்ட மேற்கு மண்டல செயலாளர் துளசிமணி, திராவிடர் பேரவை தலைவர் மாசிலாமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.