விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு – இந்தியா கேட் பகுதியில் டிராக்டரை கொளுத்தி போராட்டம்!
விவசாய பாதுகாப்பு மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப், டெல்லி பகுதிகளில் போராட்டம் உக்கிரமடைந்துள்ளது.
#WATCH: Punjab Youth Congress workers stage a protest against the farm laws near India Gate in Delhi. A tractor was also set ablaze. pic.twitter.com/iA5z6WLGXR
— ANI (@ANI) September 28, 2020
பஞ்சாப் மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸ் சார்பில், டெல்லியில் இந்தியா கேட்
பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சாலையில் டிராக்டரை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உடனடியாக தீயை அணைத்தனர். இது தொடர்பாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவிலும் விவசாய மசோதாவுகு போராட்டம் வலுத்துள்ளது. அங்கு எதிர்கட்சிகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் பேருந்து சேவை முடங்கியது. பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடப்பதால்
Karnataka: Passengers arrive at Majestic Bus Station, Bengaluru despite a statewide bandh called by farmers’ organisations.
The bandh has been called in protest against #FarmBills, land reform ordinances, amendments to Agricultural Produce Market Committee (APMC) & labour laws. pic.twitter.com/jE7h3veQgW
— ANI (@ANI) September 28, 2020
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.