சிட்கோ அமைக்க எதிர்ப்பு – ஆட்சியரிடம் ஜோதிமணி எம்.பி மனு

 

சிட்கோ அமைக்க எதிர்ப்பு – ஆட்சியரிடம் ஜோதிமணி எம்.பி மனு

வேடசந்தூர் அடுத்த ஆர்.கோம்பை பகுதியில் சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மனு அளித்தார்.

சிட்கோ அமைக்க எதிர்ப்பு – ஆட்சியரிடம் ஜோதிமணி எம்.பி மனு

அந்த மனுவில் ஆர்.கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட சீலக்கரடு பகுதியில் சிட்கோ அமைக்க, பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இயற்கை வளங்களை அழிக்கும் வேலை நடைபெறுவதாகவும், அதை தடுக்க முயன்ற பொதுமக்களுக்கும், நேரில் பார்வையிட சென்ற தனக்கும், ஊராட்சி தலைவர் மலர்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து முறையாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஜோதிமணி, சிட்கோ தொடர்பாக ஊர் மக்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும், போராடி வரும் மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, அப்பகுதியில் சிட்கோ அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிட்கோ அமைக்க எதிர்ப்பு – ஆட்சியரிடம் ஜோதிமணி எம்.பி மனு