விவசாயிகள், மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு: 28 முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம்

 

விவசாயிகள், மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு: 28 முதல்  நாடு தழுவிய பிரச்சார இயக்கம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள், மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 28 ஆம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது என்று நாகையில் தேசிய மீனவர் பேரவையின் துணை தலைவர் குமரவேல் அறிவித்துள்ளார்.

விவசாயிகள், மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு: 28 முதல்  நாடு தழுவிய பிரச்சார இயக்கம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மீனவர் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நாகையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசின், மீன்வள கொள்கை, இ.ஐ.ஏ, வேளாண் மசோதா உள்ளிட்ட மத்திய அரசின் தொழிலாளர்களின் உரிமையை பறிக்க கூடிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள், மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு: 28 முதல்  நாடு தழுவிய பிரச்சார இயக்கம்

கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மீனவர் பேரவையின் துணை தலைவர் குமரவேல், மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகள் மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை கண்டித்தும் வருகின்ற 28 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பிரச்சாரம் தொடங்க இருப்பதாக அறிவித்தார். மேலும், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் தொடங்க உள்ள பிரச்சார இயக்கத்தில், தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவ இயக்கங்களை ஒருங்கிணைத்து நவம்பர் 10 ஆம் தேதி வரை தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தார்.