‘உன் இடுப்பே அப்படிதான் இருக்கு’ லியோனிக்கு கடும் எதிர்ப்பு!!

 

‘உன் இடுப்பே அப்படிதான் இருக்கு’  லியோனிக்கு கடும் எதிர்ப்பு!!

சமீபத்தில் கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து திமுக நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஊழலில் திளைத்து உள்ள எஸ்.பி. வேலுமணிக்கு கார்த்திகேய சிவசேனாபதி சாவுமணி அடிக்க போகிறார். கார்த்திகேய சிவசேனாபதி என்ன செய்தார் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ?மாடுகளில் பல ரகங்கள் உண்டு . நாட்டு மாடு பாலை குடிச்சு குடிச்சு தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதி போய்விட்டார்கள். ஒரு காலத்துல பெண்களுடைய இடுப்பு எட்டு மாதிரி இருக்கும் பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்து உட்கார்ந்து கொள்ளும் . ஆனால் நாட்டு மாடு குடித்து பெண்கள் இடுப்பு என்று பேரல் மாதிரி ஆகிவிட்டது. பிள்ளை இடுப்புல இருந்து வழுக்கிட்டு போகுது” என்றார். திண்டுக்கல் ஐ லியோனின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘உன் இடுப்பே அப்படிதான் இருக்கு’  லியோனிக்கு கடும் எதிர்ப்பு!!

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், மிகப்பெரிய ஊழல் நடந்த ஒன்று நாட்டு மாடு பாலில் தான். நாட்டு மாடு பால் குடித்து பெண்கள் பேரல் போல் ஆகிவிட்டார்கள் என திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார். இப்படி பேச அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லாருமே செக்ஸிஸ்ட் ( sexist )ஆக இருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் லியோனி கண்ணாடியை பார்த்து பல நாள் இருக்கும் போலிருக்கிறது. அவர் இடுப்பே அப்படிதான் இருக்கு. உதாரணத்துக்கு அதையே சொல்லி இருக்கலாம்; ஆனா பொண்ணுங்க கிட்ட தான் வருவாங்க ” என்று காட்டமாக கூறியுள்ளார்.

‘உன் இடுப்பே அப்படிதான் இருக்கு’  லியோனிக்கு கடும் எதிர்ப்பு!!

இதனிடையே கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக திண்டுக்கல் ஐ.லியோனி மீது, பெண் வழக்கறிஞர் சுபாஷினி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது