சாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்! – பா.ஜ.க கண்டனம்

 

சாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்! – பா.ஜ.க கண்டனம்

சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை. மகன் உயிரிழந்த சம்பவத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையே நேரடியாக விசாரித்து வருகிறது. சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரிக்கச் சென்ற அமர்வு நீதிமன்ற நீதிபதியையே அவதூறாக திட்டியதாக புகார் வந்துள்ளது. வழக்கு தொடர்பாக போலீசார் ஒத்துழைக்க மறுப்பதாக நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதெல்லாம் சாதாரண விஷயம் என்பது போல தமிழக பா.ஜ.க பேசி வருகிறது.

சாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்! – பா.ஜ.க கண்டனம்கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், “மத்திய அரசின் சாதனைகளை வீடுவீடாகச் சென்று எடுத்துக் கூறி வருகிறோம். ராமர் கோவில், காஷ்மீர் விவகாரம் என்று பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகள் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள 1.75 லட்சம் கோடி நிவாரணம் வழங்கியிருப்பது பற்றி கூறி வருகிறோம்.
தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு தமிழக பா.ஜ.க சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. 30 லட்சம் பேருக்கு மோடி கிச்சன் என்ற மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் விவகாரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியலாக்குவது சரியில்லை. ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைகூறுவது சரியில்லை” என்றார்.