காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்ப்பதா? ஓபிஎஸ் கண்டனம்!

 

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்ப்பதா? ஓபிஎஸ் கண்டனம்!

காவிரி -வைகை -குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரான வகையிலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்ததற்கு தமிழ் நாட்டின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவிரி -வைகை -குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்குள் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கர்நாடக அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது.

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்ப்பதா? ஓபிஎஸ் கண்டனம்!

வெள்ளப் பெருக்கின் போது காவிரி கொள்ளிடம் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ,விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்கும் திருப்பி விட ஏதுவாக நீண்ட நாள் கனவு திட்டமான காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டு 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும் என்பதால் அந்த திட்டத்திற்கு தமிழ்நாடு ஒப்புதல் தரவில்லை என்பதற்காக வேண்டும் என்று தங்களது தொடர்பில்லாத தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை கேட்டு கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது நியாயமற்ற செயல்; சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி சென்னை மாகாண அரசின் அனுமதியின்றி மைசூர் மாகாண அரசு காவிரி நீரைத் தடுக்கும் வகையில் அணைகளை கட்ட கூடாது என்பது தான். இதற்கு காரணம் காவிரி ஆற்றின் மேல் படுகையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் அணைகளை கட்டினால் காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தமிழ் நாட்டிற்கு வரும் தண்ணீர் தடைபடும் என்பதால் தான். தமிழ்நாட்டின் அனுமதி பெறாமல் அணை கட்டக்கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் மீறி மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் போது அதனை தமிழ்நாடு எதிர்க்கிறது. இதற்கு காரணம் புதிய அணைகளை கட்டும்போது தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீரின் அளவு வெகுவாக குறையும்.

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்ப்பதா? ஓபிஎஸ் கண்டனம்!

அதே சமயத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டம் ,கடலூர் நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் காரணமாக தமிழ்நாட்டில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீர் ,தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கு திருப்பி விடப்படும் ,இது தவிர அவருக்கு எந்தவித பாதகமும் ஏற்படாது, எனவே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறாமையின் வெளிப்பாடு. , எனவே தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறாமையின் வெளிப்பாடு. இதன் மூலம் உபரி நீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் படுத்த கூடாது என்ற கர்நாடக அரசின் கெடுப்பது என்னும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்ப்பதா? ஓபிஎஸ் கண்டனம்!

சென்னை மைசூர் மாகாணங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கு திருப்பி எடுத்துச் செல்லும் திட்டம் உட்பட தமிழ்நாட்டு நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய கர்நாடக அரசுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. இந்த மாதம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டம், கடலூர், நாகப்பட்டினம், கரூர் ,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு தடை கோரி கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக தள்ளுபடி செய்வதற்கு தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.