சிவில் சர்வீஸ் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு! – யு.பி.எஸ்.சி அறிவிப்பு

 

சிவில் சர்வீஸ் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு! – யு.பி.எஸ்.சி அறிவிப்பு

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் தங்கள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.கொரோனா பாதிப்புக்கு முன்பு இதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பலரும் தங்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். மீண்டும் எப்போது பணி செய்யும் இடம் அல்லது படிக்கும் இடத்துக்கு செல்வோம் என்று தெரியாத நிலையில் பலரும் உள்ளனர். இதனால், குறிப்பிட்ட தேர்வுக்கு மையத்துக்கு சென்று தேர்வு எழுத முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

சிவில் சர்வீஸ் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு! – யு.பி.எஸ்.சி அறிவிப்பு
இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை யு.பி.எஸ்.சி வழங்கியுள்ளது. ஜூலை 7 முதல் 13 மற்றும் 20-24ம் தேதி வரை யுபிஎஸ்சி-யின் என்ற தளத்துக்கு சென்று தேர்வு மையத்தை https://t.co/49vS93v2y5 மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.