தியேட்டர் திறப்பு பற்றி நாளை அறிவிக்க வாய்ப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

தியேட்டர் திறப்பு பற்றி நாளை அறிவிக்க வாய்ப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து முதல்வர் நாளை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தியேட்டர் திறப்பு பற்றி நாளை அறிவிக்க வாய்ப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. 7 மாதத்திற்கு மேல் ஆகியும் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தும் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கபபடாதது, தியேட்டர் உரிமையாளர்களை அதிருப்தி அடையச் செய்தது. விரைந்து தியேட்டர்களை திறக்க அனுமதி தர வேண்டும் என அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

தியேட்டர் திறப்பு பற்றி நாளை அறிவிக்க வாய்ப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்த நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ , ‘தியேட்டர்களை திறப்பது தொடர்பாக முதல்வர் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். மருத்துவக் குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிகப்பட்டது. விரைவில் நல்ல முடிவு வரும். இதனை பற்றிய விவரங்கள் நாளை வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது’ என தெரிவித்தார்.