புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் நாளை கருத்து கேட்பு !

 

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் நாளை கருத்து கேட்பு !

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோர், மாணவர்களிடம் நாளை கருத்து கேட்பு நடைபெறுகிறது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் நாளை கருத்து கேட்பு !

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்தது. அதன் எதிரொலியாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த குழுவானது முதற்கட்டமாக தமிழக அரசின் கீழ் இயங்கும் 15 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தியது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் நாளை கருத்து கேட்பு !

இந்த நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்துகளை கேட்க உயர்க்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தங்கள் கருத்துக்களை பதிவு செய்து கொள்ளலாம். இதனடிப்படையில் புதிய கல்வி கொள்கை குறித்து உரிய முடிவை தமிழக அரசு எடுக்கும் என கூறப்டுகிறது.