‘சட்டப்பேரவையில் புதிதாக 3 தலைவர்களின் படங்கள் திறப்பு’ : யார் யார் படங்கள் என்று தெரியுமா?
Feb 19, 2021, 12:33 IST1613718237000
தமிழக சட்டப்பேரவையில் மூன்று தலைவர்களின் படங்கள் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் வரும் 23ஆம் தேதி மூன்று தலைவர்களின் படங்கள் திறப்பு விழா நடைபெறுகிறது . வஉசி, ப. சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் படங்கள் பேரவையில் திறக்கப்படுகின்றன. மூன்று தலைவர்கள் படங்கள் திறப்பதன் மூலம் பேரவையில் தலைவர்களின் படங்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் மாலை 5.30 மணிக்கு படத்திறப்பு விழா நடக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ராமசாமி படையாட்சியார் ஆகிய 12 பேரின் புகைப்படங்கள் உள்ளன.