கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கூலி தொழிலாளி பலி

 

கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கூலி தொழிலாளி பலி

நீலகிரி

நீலகிரி அருகே சுற்றுலா வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவிராஜ். கூலி தொழிலாளி. இவரது மகன் கோகுல். நேற்று ரவிராஜ் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் கோத்தகிரி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். கோத்தகிரியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக ஈரோட்டில் இருந்து சுற்றுலா வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானது.

கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கூலி தொழிலாளி பலி

இந்த விபத்தில் சாலையில் தூக்கிவீசப்பட்ட ரவிராஜ் படுகாயம் அடைந்தார். சிறுவன் கோகுல் லேசான காயமடைந்தார். அருகில் இருந்தவர்களை ரவிராஜை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் கோவை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய கோத்தகிரி போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து ஈரோட்டை சேர்ந்த கார் ஓட்டுநர் லோகேஷ்வரன் என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.