ஊட்டி- அரசு சத்துணவு கூடங்களுக்கு தீயணைப்பு கருவிகள் வழங்கிய ஆட்சியர்
Oct 20, 2020, 14:32 IST1603184554000
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் 12 அரசு சத்துணவு மையங்களுக்கு தீ அணைக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று வழங்கினார். இதன்படி, நஞ்சநாடு, தும்மனட்டி, தூனேரி, எடக்காடு,
கோத்தகிரி, கொளப்பள்ளி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 12 அரசு பள்ளிகளுக்கு தீயை அணைக்கும் உலர் ரசாயனதூள் கருவி வழங்கப்பட்டது. இந்த கருவியினை சத்துணவு மையங்களில், மாணவர்கள் மற்றும் பள்ளியின் பாதுகாப்பு கருதியும் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.