ஊட்டி- தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

 

ஊட்டி- தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில் 3 பேரை வனத்துறையினர் கைதுசெய்தனர். ஊட்டி அடுத்த சின்னகுன்னூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. இந்நிலையில், உயிரிழந்த யானையை யாருக்கும் தெரியாமல் பெந்தட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் புதைத்து வைத்துள்ளனர்.

ஊட்டி- தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

புகைக்கப்பட்ட யானையின் தந்தம் வெளியே தெரிவதை கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (40), கோபாலகிருஷ்ணன் (20), அஜித்குமார் (18) ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யானையின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.