சரக்கு ரயில் கார்டு தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே வெற்றி… சந்தேகம் கிளப்பும் மதுரை எம்.பி

 

சரக்கு ரயில் கார்டு தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே வெற்றி… சந்தேகம் கிளப்பும் மதுரை எம்.பி

தென்னக ரயில்வே நடத்திய சரக்கு ரயில் கார்டு தேர்வில் தமிழர்கள் ஐந்து பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சரக்கு ரயில் கார்டு தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே வெற்றி… சந்தேகம் கிளப்பும் மதுரை எம்.பிஇது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டியின் பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. துறையில் பணியாற்றுகிற சுமார் 5000 பேர் கலந்துகொண்ட இத்தேர்வில், 96பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அதில் ஐவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 91 பேரும் வட இந்தியர்கள்.

http://

http://


தேர்வு எழுதியவர்களில் சுமார் 3000 பேர் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள். ஆனால் ஐவர் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தென்னக ரயில்வேயின் தமிழர் விரோத போக்கின் மற்றொரு வெளிப்பாடாக இது உள்ளது” என்று கூறியுள்ளார்.