இன்னும் 4 சாட்சிகள்தான்… ஜெ., மரணத்தில் விரிவான விசாரணை

 

இன்னும் 4 சாட்சிகள்தான்… ஜெ., மரணத்தில் விரிவான விசாரணை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில் இன்னும் நான்கு சாட்சிகளிடம் மட்டுமே விசாரிக்க வேண்டியது இருக்கிறது என்று ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது.

இன்னும் 4 சாட்சிகள்தான்… ஜெ., மரணத்தில் விரிவான விசாரணை

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அப்பல்லோ நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனுவும், அந்த ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மனுவும் உச்ச நீதிமன்ற மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் மனுவை விசாரித்த அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு, முக்கிய சில வழக்குகளை விசாரிக்க வேண்டி இருப்பதால் அடுத்த வாரத்திற்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இன்னும் 4 சாட்சிகள்தான்… ஜெ., மரணத்தில் விரிவான விசாரணை

இதையடுத்து, இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரிக்க படாமல் நிலுவையில் இருப்பதாகவும் ஒவ்வொரு முறையும் விசாரிக்காமலேயே வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தெரிவித்தார். அவர் மேலும், தங்கள் தரப்பில் இன்னும் நான்கு சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தங்களால் மேற்கொண்டு விசாரிக்க முடியாத நிலை இருக்கிறது என்று வாதிட்டார்.

ரஞ்சித்குமாரின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கை அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், வியாழக்கிழமை அன்று விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.