மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்

 

மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. அதன் படி, நேற்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று வெகுவாக கேள்வி எழுந்து வந்த நிலையில், இது குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில், ஆகஸ்ட் மாதம் பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது முடக்கத்தின் போது கட்டணம் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.