ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் : விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார்!

 

ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் :  விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார்!

ஆன்லைனில் பல சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, ஆன்லைனில் ’ரம்மி’ என்ற சீட்டாட்ட விளையாட்டுக்கு தனி மவுசு. அதை விளையாட அழைக்கும் விதமான விளம்பரங்கள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிப்பரப்பாவதைப் பார்க்க முடியும். இதனால், இளைஞர்களின் நேரமும் பணமும் விரயமாவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் :  விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ‘ஆன்லைன்’ விளையாட்டுகள் களான்கள் போல முளைத்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் வீட்டில் இருந்தபடியே எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களைத் தூண்டுகின்றன. இதனால் நிதி நெருக்கடி மற்றும் உயிர் பலிகள் கூட ஏற்படுகின்றன.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் :  விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார்!

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தின் விளம்பரத்தில் நடித்து வரும் விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனிடையே பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆன்லைன் சூதாட்ட நிகழ்ச்சிக்கு தடை விதிக்ககோரி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.