சூடு பிடிக்கும் சுஷாந்த் சிங் வழக்கு -நடிகை ரியா சக்ரவர்த்தியை திட்டிய நெட்டிசன்கள் -கொட்டிய வார்த்தைகளை கண்டு கொதிக்கும் பெங்காலி பெண்கள்..

 

சூடு பிடிக்கும் சுஷாந்த் சிங் வழக்கு -நடிகை ரியா சக்ரவர்த்தியை திட்டிய நெட்டிசன்கள் -கொட்டிய வார்த்தைகளை கண்டு கொதிக்கும் பெங்காலி பெண்கள்..

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டதால் ,பெங்காலி பெண்ணான நடிகை ரியா சக்ரவர்த்தியால் , சில சமூக ஊடக பயனர்கள் மொத்தமாக பெங்காலி பெண்களை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளனர். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங் சக்ரவர்த்தி ,ரியா உள்பட மற்றும் ஐந்து பேருக்கு எதிராக தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்ததை அடுத்து, வங்காள பெண்களை ஆன்லைனில் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு செய்ததாக கொல்கத்தா காவல்துறையின் சைபர் செல் மற்றும் மாநில பெண்கள் ஆணையம் பல புகார்களைப் பெற்றுள்ளன.

சூடு பிடிக்கும் சுஷாந்த் சிங் வழக்கு -நடிகை ரியா சக்ரவர்த்தியை திட்டிய நெட்டிசன்கள் -கொட்டிய வார்த்தைகளை கண்டு கொதிக்கும் பெங்காலி பெண்கள்..
சிலர் இணையத்தளத்தில் பெங்காலி பெண்களை ‘தங்கநகைக்கு அலைபவர்கள்’ என்றும் ,இன்னும்சிலர் சூனியக்காரிகள் என்றும் இன்னும் பலர் அதிகார திமிர் பிடித்தவர்கள் என்றும் திட்டியுள்னர்
இதற்கு டி.எம்.சி பாராளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான் உட்பட பல முக்கிய நபர்கள் இந்த ட்விட்டுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர் . ” ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்.”என்று ஜஹான் கூறினார்
சைபர் செல் அதிகாரிகள் இந்த புகார்களை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிடும் சமூக ஊடக கணக்குகளின் விவரங்களை வழங்குமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

சூடு பிடிக்கும் சுஷாந்த் சிங் வழக்கு -நடிகை ரியா சக்ரவர்த்தியை திட்டிய நெட்டிசன்கள் -கொட்டிய வார்த்தைகளை கண்டு கொதிக்கும் பெங்காலி பெண்கள்..