விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் ஓ.என்.ஜி.சி! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

 

விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் ஓ.என்.ஜி.சி! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

எண்ணெய் கிணறு அமைக்கப்படாது, வயல்கள் வழியாக குழாய் பதிக்கப்படாது என்று விசாயிகளுக்கு கொடுத்த வாக்குறதியை மீறி நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய் அமைக்குபம் பணியை நடத்தி வருகிறது. இதை உடனடியாக கைவிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் ஓ.என்.ஜி.சி! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசனப்பகுதியில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் உழவர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. உழவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் விவசாயத்தை அழிக்கும் நோக்குடன் கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்ப்பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் ஓ.என்.ஜி.சி! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம் திட்டம் என்ற பெயரில் 7 ஆண்டுகளுக்கு முன் அதிக எண்ணிக்கையில் எண்ணெய்க் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்தது. அங்கு கச்சா எண்ணெயும், எரிவாயும் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன. அங்கு எடுக்கப்படும் எரிவாயுவை கொண்டு செல்வதற்காக மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கி.மீ. தூரத்துக்கு கெயில் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப் பட்டன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. உழவர் அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் எரிவாயு குழாய் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் ஓ.என்.ஜி.சி! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் நிறுவனம் இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பாதையில் அமைக்காமல், சீர்காழி அருகே உள்ள திருநகரியில் இருந்து உச்சிமேடு, வெள்ளக்குளம், கேவரோடை, இருவக்கொல்லை ஆகிய கிராமங்களின் வழியாக முதன்மை எரிவாயு சேமிப்பு மையத்திற்கு புதிய வழித்தடத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மீண்டும் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்திலும் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் உழவர்கள் வெளியில் வந்து போராட்டம் நடத்த முடியாது என்ற எண்ணத்தில் கெயில் நிறுவனம் தொடந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் இத்திட்டத்தை அரசு அனுமதிக்கக்கூடாது.

விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் ஓ.என்.ஜி.சி! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
மாதானம் பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கிணறுகள் தோட்டப்பட்ட போது உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அந்த பகுதியில் கூடுதலாக எண்ணெய், எரிவாயு கிணறுகள் தோண்டப்படாது; கச்சா எண்ணெயும், எரிவாயுவும் சரக்குந்து மூலமாக மட்டுமே கொண்டு செல்லப்படும்; அதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்படாது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கூடுதலாக 7 எண்ணெய்க் கிணறுகளை ஓ.என்.ஜி.சி அமைத்தது. அடுத்தக்கட்டமாக குழாய்ப்பாதை அமைக்கும் பணிகளையும் உழவர்களின் எதிர்ப்பையும் மீறி ஓ.என்.ஜி.சி நிறுவனமும், கெயில் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன. இது உழவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகமாகும்.
மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் பல்லாயிரம் விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். உழவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டு, எண்ணெய் குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு இணையான அழிவுச் செயலாகும்.

விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் ஓ.என்.ஜி.சி! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
மாதானம் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்படும் போதே, அதற்கு அங்குள்ள உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குழாய்ப்பாதைகள் அமைக்கப்படாது என்று ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் நிறுவனங்கள் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்த தொடர் இயக்கங்கள் காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும் விவசாயத்தை அழித்து எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்ப்பாதை அமைப்பது எந்த வகையிலும் அறம் அல்ல…. நியாயமும் அல்ல.
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொழிற்திட்டங்களும், எரிபொருள் திட்டங்களும் தேவை தான். ஆனால், அவை விவசாயத்தை அழிப்பதாக இருந்து விடக்கூடாது. விவசாயத்தை அழித்து குழாய்ப்பாதை அமைப்பது காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதன் நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடும். எனவே, மாதானம் முதல் மேமாத்தூர் வரை எரிவாயு குழாய்ப் பாதை அமைக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் நிறுவனங்கள் கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.