நடிகை குஷ்பு மீது மூன்றாவது புகார்

 

நடிகை குஷ்பு மீது மூன்றாவது புகார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக-வில் இணைந்த நடிகை குஷ்பு சுந்தர், அக்-13 அன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, காங்கிரஸ் கட்சியை “மூளை வளர்ச்சி இல்லாத கட்சி” என விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். சென்னை பரங்கிமலை காவல்நிலையத்திலும், மதுரை காவல்நிலையத்திலும் குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டது.

நடிகை குஷ்பு மீது மூன்றாவது புகார்

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகை குஷ்பு மீது புகார் மனு அளித்தனர். நடிகை குஷ்புவின் பேச்சு மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான சட்ட விரோதமான பேச்சாகும். இந்த கருத்து மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும், சிறுமைப்படுத்தும் விதத்தினால கருத்தாகும். எனவே உள்நோக்கத்துடன் மாற்றுத்திறனாளிகளை பேசியதாக குஷ்பு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மனுவைப் பெற்ற போலீசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.