தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை பலி

 

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை பலி

திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் செத்தமலை வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ஒரு வயதில் ரஷித் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே ரஷித் விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமா திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்தது.

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை பலி

இதில், குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்து. ரஷித் மாயமானதால் பெற்றோர் தேடிய நிலையில், அவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, குழந்தை மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.