பேரறிவாளனுக்கு மேலும் ஒருவாரம் பரோல் நீட்டிப்பு!

 

பேரறிவாளனுக்கு மேலும் ஒருவாரம் பரோல் நீட்டிப்பு!

பேரறிவாளனுக்கு மேலும் ஒருவார காலம் பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுக்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்கக்கோரி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை குறித்த கோப்பினை தமிழக அரசு ஆளுநரிடம் சேர்த்துள்ள நிலையில் இதுகுறித்து ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார்.

பேரறிவாளனுக்கு மேலும் ஒருவாரம் பரோல் நீட்டிப்பு!

இதுவொருபுறமிருக்க ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தான் பேட்டரி வாங்கி வந்து கொடுத்தேன். ஆனால் அதை எதற்காக வாங்கி வர சொன்னார்கள் என்று தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரறிவாளனுக்கு மேலும் ஒருவாரம் பரோல் நீட்டிப்பு!

இந்நிலையில் தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு மேலும் ஒருவார காலம் பரோலை நீட்டித்துள்ளது. அத்துடன், பேரறிவாளனுக்கு சிகிச்சைக்கு செல்லும் போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.