நீட் தேர்வால் மற்றொரு மாணவன் தற்கொலை! ஒரே நாளில் 3ஆவது தூக்கு

 

நீட் தேர்வால் மற்றொரு மாணவன் தற்கொலை! ஒரே நாளில் 3ஆவது தூக்கு

நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வால் மற்றொரு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளுக்கு இடையே நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க மறுத்த மத்திய அரசு, ஒத்திவைக்கவும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் பல மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்வார்கள் என வெகுவாக கேள்வி எழுந்துள்ளது. மருத்துவ படிப்புக்கான இந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத மாணவர்கள் எடுக்கும் ஒரே முடிவு தற்கொலை தான். பயமின்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என கல்வியலாளர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தோல்வி அடைந்து விட்டால் எதிர்காலம் என்ன ஆகும் என எண்ணும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நீட் தேர்வால் மற்றொரு மாணவன் தற்கொலை! ஒரே நாளில் 3ஆவது தூக்கு

திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவர் மகன் மோதிலால் (21) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ஆர். நாளை நடைபெற இருந்த நீட் தேர்வை மோதிலால் எழுத இருந்த நிலையில் நீட் தேர்வின் அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நீட் தேர்வுக்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவர் விக்னேஷும், இன்று மாணவி ஜோதிஸ்ரீ துர்காவும், ஆதித்யாவும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடதக்கது.