சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா? ஐபிஎல் போட்டி நடத்துவதில் சிக்கல்!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா? ஐபிஎல் போட்டி நடத்துவதில் சிக்கல்!

எல்லா வருடமும் ஐபிஎல் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதே போல இந்த ஆண்டு கொரோனாவால் தள்ளிப்போடப்பட்ட ஐபிஎல் போட்டி , வரும் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட அனைத்து அணிகளும் கடந்த 21 ஆம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றனர். அங்கு அணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் பிறகே போட்டிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா? ஐபிஎல் போட்டி நடத்துவதில் சிக்கல்!

அதன் படி நேற்று சென்னையில் இருந்து 52 பேர் கொண்ட குழுவாக சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 3 ஆண்டுகள் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி இந்த ஆண்டும் வெற்றி பெறும் என ஆவலுடன் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. அதாவது, சிஎஸ்கே அணியின் வீரர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா உறுதியானதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா? ஐபிஎல் போட்டி நடத்துவதில் சிக்கல்!

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ஐபிஎஸ் போட்டி நடத்துவதில் அடுத்தடுத்து சிக்கல் நீட்டிப்பதால் போட்டி ரத்தாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.